மதுரை, அக்.4- மதுரை மாவட்டம் உசி லம்பட்டி ஒன்றியம் உ.வாடிப் பட்டி பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி உத்தப்பநாயக்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறி யல் போராட்டம் நடை பெற்றது. மறியலுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, செ. முத்துராணி ஆகியோர் தலைமை வகித்தனர். உசி லம்பட்டி ஒன்றியச் செயலா ளர் பி.ராமர், உத்தப்ப நாயக்கனூர் முன்னாள் ஊரா ட்சி மன்ற தலைவர் அர்ஜூ னன், மாவட்ட கவுன்சிலர்கள் ரெட்காசி, சுதாகரன் ஒன் றிய கவுன்சிலர் பாண்டிச்செல்வி சுரேஷ் உட்பட உ.வாடிப் பட்டி கிராம மக்கள் சுமார் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தற்காலிகமாக நகராட்சி குப்பைகளை வேறு இடத் திற்கு கொண்டு செல்வது என்றும் காவலாளிகள், சிசிடிவி கேமரா அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட் டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக சாலை மறி யல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.