மதுரை, ஜன.4- எழுமலை முதல்நிலை பேரூராட்சியில் 100 நாள் வேலை உடனடியாக வழங்க வேண்டும். எழுமலையில் குடிநீர் வினியோ கத்தை சரியான முறையில் முறைப்படுத்தி வழங்க வேண்டும். மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பொது கழிப்பிடங்களை அதி கப்படுத்த வேண்டும். செங்கல் சூளை தொழிலை பாதுகாத்திட உடனே நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் சேடபட்டி ஒன்றியக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுமலை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பெ.ராஜாசங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வி.பி.முருகன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் என்.ஜெயபால், எம்.செல்லத்துரை, கே.ராமர், எஸ்.முருகன், எம்.மகாலிங்கம், பி.காசிமாயன், எஸ்.சங்கிலி ஆகியோர் பேசினர்.