தென்காசி, ஏப்.3- தென்காசி மாவட்டம் சிவகிரி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். வாசு ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்ராஜ் கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 2வது கிளைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், 3வது கிளைச் செயலாளர் சக்திவேல் மற்றும் மூத்த தோழர்கள் ஆர்.கருப் பையா, கே.எம்.கிருஷ்ணன், வழக் கறிஞர் கண்ணன் உட்பட பலர் பேசினர், சிபிஎம் மூத்த தலைவர் ஜெயராஜ் நிறைவுரையாற்றி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரி யசாமி, குருசாமி, கொத்தனார் குருசாமி, இபி குருசாமி, எம்.ஜோதிபாசு, தேவிபட்டினம் கிளைச் செயலாளர் புஷ்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செய லாளர் ப.சுப்பையா தலைமை வகித்தார். வட்டாரக் குழு உறுப்பி னர்கள் மா.கிருஷ்ணமூர்த்தி, மா. சஞ்சீவி, மூத்த தோழர்கள் ம.மரு தையா, மீனாட்சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிபிஎம் வாசு ஒன்றியச் செயலாளர் இரா.நடராஜனும், முடித்து வைத்து சிபிஎம் தென் காசி மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டியனும் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மலையடிக் குறிச்சி இ.வெள்ளத்துரை, ஆட்டோசங்க தலைவர் ரஞ்சித், கட்டுமான சங்கத் தலைவர் க. மாரியப்பன் உட்பட 33 பேர் பங் கேற்றனர்.