மதுரை, ஆக.9- ஹரியானா - மணிப்பூர் மாநிலங்களில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய -மாநில பாஜக அரசு களைக் கண்டித்தும் கல வரத்தை ஏற்படுத்தும் சங்பரி வார் அமைப்புகளை கட்டுப் படுத்தக்கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் உசி லம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் பெ.ராமர் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் செ.முத்து ராணி, வி.பி.முருகன், வி. உமாமகேஸ்வரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பி னர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
மணிப்பூர், ஹரியனா மாநிலங்களில் சிறுபான்மை யினரை குறி வைத்து வன் முறையை கட்டவிழ்த்து விட்ட பாஜக அரசை கண் டித்து அருப்புக்கோட்டை யில் நடைபெற்ற இப்போரா ட்டத்திற்கு தவசிமுனி யாண்டி தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன் பேசி னார். நகர் செயலாளர் எஸ். காத்தமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங் கோதை ஆகியோர் விளக்கிப் பேசினர். முடி வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சுந்தர பாண்டியன் கண்டன உரை யாற்றினார். மேலும் இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன், திருச் சுழி ஒன்றிய செயலாளர் மார்கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.