நாகப்பட்டினம், டிச.15 - வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நாகப்பட்டி னம் மாவட்டம் பகுதி முழு வதும் பாதிப்புக்குள்ளானது. பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.30,000 வழங்க வேண்டும். கனமழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேத மாகின. சேதமடைந்த அனைத்து வீடுகளையும் முறையாக கணக்கெடுத்து சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரணமும், கன மழையால் உயிரிழந்த கால்ந டைகளுக்கும், கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால் நடைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து கடந்த ஒரு மாதமாக வேலையின்றி வருமானம் இழந்து தவிக் கும் விவசாயத் தொழிலா ளர்களுக்கும்,
விவசாய தொழிலாளர்களின் குடும்பத் திற்கும் ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து தலைமை வகித்தார். கீழ்வே ளூர் வடக்கு ஒன்றிய செய லாளர் என்.எம்.அபூபக்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு
தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில தலைவர் வீ.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. சுபாஷ் சந்திரபோஸ், நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் வி.வி.ராஜா, திருமருகல் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு, நாகை நகர செயலாளர் க. வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருக்குவளை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.லதா, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் கே. சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் கோட்டாட் சியர் அலுவலகம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய செயலாளர் தோழர் வி.அம்பிகாபதி, வேதாரண் யம் வடக்கு ஒன்றிய செய லாளர் ஏ.வெற்றியழகன், மாவட்ட குழு உறுப்பினர் பி.எஸ். பன்னீர்செல்வம், வேதாரண்யம் ஒன்றிய மாதர் சங்க பொறுப்பாளர்கள் முருகேஸ்வரி, வெண்சங்கு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.