திண்டுக்கல், நவ.22- திண்டுக்கல் நத்தம் ரோடு வாழைக்காய்பட்டி முதல் கண் ணார் பட்டி வெள்ளோடு வரை யிலான சாலையை செப்பனிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார் பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் கடு மையாக சேதம் அடைந்துள்ளன. திண்டுக்கல் நத்தம் சாலையில் இருந்து வாழைக்காய்பட்டிக்கு கிராமப்புற சாலை செல்கிறது. இதேபோல் கண்ணார்பட்டியிலி ருந்து வெள்ளோடு வரை இன் னொரு இணைப்பு சாலை செல் கிறது. இந்த இரண்டு சாலைகளி லும் முத்தமிழ்நகர், கல் நூத்தம் பட்டி, சூசையாபுரம், தண்டல்காரன் பட்டி என பல கிராமங்கள் உள்ளன. அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதிகளில் உள்ள இந்த கிராமப்புற சாலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலை என்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை என்றும் சர்ச்சை நிலவுகிறது.
இதன் கார ணமாக பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள் ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கிட்டத்தட்ட சாலையில் 45 இடங்களில் பள் ளங்களாகவும் 10 இடங்களில் பெரும்பள்ளங்களும் உள்ளன. இது தொடர்பாக ஊராட்சி தலை வர் ஜீவானந்தம் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. எனவே இப்பகுதியில் விரைந்து சாலை அமைக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண் டுக்கல் ஒன்றியக் குழு சார்பாக செவ் வாய்க்கிழமையன்று நத்தம் சாலை வாழைக்காய்பட்டி பிரி வில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடியனூத்து ஊராட்சி மன்ற தலை வர் ஏ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டக்குழு உறுப்பி னர் தா. அஜய் கோஸ், ஒன்றிய செயலாளர் சரத்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வநாயகம், ஜீவா, நந்தினி, பிருந்தா, பரசு ராமன், திண்டுக்கல் மாமன்ற உறுப் பினர் எஸ்.என்.ஜோதிபாசு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.