districts

img

மதுரை துணைமேயரைக் கொல்ல முயற்சி

மதுரை, ஜன. 10-    மதுரை மாநகராட்சி  துணை மேயரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரு மான தி. நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் மீது  தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளைக் கண்டித்தும்  சம்பவம் நடைபெற்ற நேரத்தில் காலம் தாழ்த்தி வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினரைக் கண்டித்தும் துணை மேயரை கொலை செய்ய துண்டிய நபர்கள் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜெய் ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் புதனன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச்  செயலாளர் மா. கணேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன், எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ். பாலா, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பகுதிச் செயலாளர் பி. செந்தில்குமார் உள்பட  ஏராளமானோர் கலந்துகொண் டனர்.

ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளரை உடனடியாக  இட மாற்றம்செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.   ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்;  மதுரை மாநகர் காவல் துறையானது  மேயர் நாக ராஜனுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்; அவசர போலீஸ் 100 உதவி எண் முறையாக செயல்பட வேண்டும்; துணைமேயர் தி.நாகராஜன் அளித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ஆர்ப்பா ட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர்.