districts

img

அசோக்கின் தந்தை முருகன் காலமானார் சிபிஎம் நெல்லை மாவட்டக் குழு இரங்கல்

திருநெல்வேலி, மே 19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளராக செயல்  பட்டுவந்த மக்கள்  போராளி அசோக்கின் தந்தை தோழர் முரு கன் வியாழக்கிழமை காலையில் உடல்நலக்குறைவால் கால மானார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக்கையில், “நெல்லை வாலிபர் சங்க தியாகி தோழர்  அசோக்கின் தந்தை தோழர் முருகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அவர் வியாழக்கிழமை காலை யில் காலமானார். அவரது இறுதி நிகழ்வு மாலை 4 மணிக்கு கரையிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. தோழர் முருகன் சிறுவயதிலேயே இடது சாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வந்தவர். தோழர் அசோக்கின் மரணத்திற்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாகவும் செயல்  பட்டு வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றது” என்றார்.  மேலும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலை யான், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இறுதி நிகழ்ச்சி

தோழர் முருகனின் இறுதி நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச்  செயலாளர் க.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பி னர் பி. கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.சுடலைராஜ், ராஜகுரு, பெரு மாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள். குழந்தைவேலு, நாராயணன், கே. பழனி. செந்தில் மாரிச்செல்வம், ராஜன், ஜோதி மற்றும் வி.ச.மாவட்ட செயலாளர் செல்லத் துரை,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  மதுரை புறநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீராம் குட்டன், கௌதம் உள்ளிட்டு பலரும் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.