தவறான தகவலை கூறிய எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலடி கொடுத்த துணைமேயர்
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பி னரும் எதிர்க்கட்சித் தலைவருமான சோலை.ராஜா, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூவின் மேற்குத் தொகுதியில் சத்து ணவு மையத்தை “இடித்துவிட்டு” மருத்துவனை வளாகம் கட்ட முயற்சிப்பதாகக் கூறி துணைமேயர் டி.நாகராஜனை வம்புக்கு இழுத்தார். அப்போது தலையிட்ட துணை மேயர், உறுப்பினர் மன்றத்தில் தவறான தகவலைப் பதிவு செய்யக்கூடாது. “இடிக்க வேண்டும்” என்று எங்கும் குறிப்பிடவில்லை. “மாற்றம் செய்ய வேண்டும்” என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் எழுத்துப்பூர்வ மாக உள்ளது. சம்மந்தப்பட்ட பகுதியில் மூன்று சத்துணவு மையங்கள் உள்ளன. அதில் ஒரு மையத்திற்கு நான்கு குழந்தைகள் மட்டுமே வருகின்றனர். தவிர, மூன்றில் ஒன்றை எதிர்புறத்திற்கு இடமாற்றம் செய்யவேண்டும். அதை மேலும் சீரமைத்து மருத்துவ மனை வளாகம் அமைக்கலாம். மருத்துவமனையால் ஏராளமானோர் பயன்பெறுவர். எதையும் இடிப்பது எங்களது நோக்கமல்ல. தவறான தகவலைப் பதிவு செய்யக் கூடாது என்றார்.
மதுரை, ஜன.25- வார்டுகளில் என்ன வேலை நடை பெறுகிறது என்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்று மதுரை மாந கராட்சிக்கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் என்.விஜயா குற்றச்சாட்டி னார். மதுரை மாநகராட்சிக் கூட்டம் ஜனவரி 25 புதன்கிழமையன்று மேயர் இந்திராணி தலைமையில் நடை பெற்றது. துணைமேயர் டி.நாகராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், ஆணையாளர் உள்பட அரசு அதிகாரி கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் மாநக ராட்சியில் எதிர்பார்த்த அளவிற்குப் பணிகள் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
மண்டலம்-1 தலைவர் வாசுகி பேசு கையில், 200 பேட்டரி வண்டிகள் ரிப்பேராகிவிட்டன. விரைவில் பழுது நீக்க வேண்டும். பாதாளச்சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகிறது. ஆனையூர் பகுதியில் இரண்டு ஆண்டு களாகியும் பணிகள் நிறைவடைய வில்லை. 36,37-ஆவது வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. தூய்மைப் பணி யாளர்களில் ஆண்களை அதிகளவு நியமிக்க வேண்டும். பெண்கள் குப்பை வண்டிகளை இழுக்க முடியாமல் சிர மப்படுகின்றனர் என்று தெரிவித்தார். மண்டலம்-2 தலைவர் சரவண புவனேஸ்வரி பேசுகையில், மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை பூட்டியே கிடக்கிறது. தண்ணீர் சுத்தி கரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் இல்லை.மாற்றுத்திறனாளிகளுக் கான சுகாதார வளாகம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.
முழுநாள் துப்புரவு முகாம் நடைபெறவில்லை
குமார் கூறுகையில், மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்களால் எழுப்பப்படும் பிரச்சனைகளில் தொடர் கவனம் இல்லை. புகார்களுக்குப் பதிலளிப்ப தில்லை. பேட்டரி வண்டிகள் ரிப்பேராகி விட்டன. மாதத்திற்கு ஒரு முறை நடத் தப்படும் முழுநாள் துப்புரவு முகாம் நடைபெறவில்லை. ஒப்பந்தப் பணி யாளர்களும், தொகுப்பூதிய பணியா ளர்களும்தான் உள்ளனர். நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நேரடியான நியமனத்திற்குச் சட்டத்தில் இடமில்லை என்று மேயர் பதிலளித்தார்.
மண்டலம்-5 தலைவர் சுவேதா பேசுகையில், அவனியாபுரம்-வில்லா புரம் சாலையைச் சீரமைக்க வேண்டும். வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை பணி களை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.அதிகாரி பதி லளிக்க முயன்றார். எல்லாவற்றிற்கும் பதிலளிக்காதீர்கள். பணிகளைத் தொடங்குங்கள் என்றார் டென்சனாக. எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா (அதிமுக) பேசுகையில், பொது நிதி போதுமானதாக இல்லை என்றீர் கள். வீட்டுவரி, சொத்துவரி உயர்த் தப்பட்டுவிட்டது. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வசூலும் நடந்துள்ளது. பணிகள்தான் நடைபெறவில்லை. மதுரை மாநகராட்சியில் 16 கால் வாய்கள் ஓடுகின்றன.கால்வாய்கள் பராமரிக்கப்படவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட ஆணையா ளர், தூர்வாரப்படுகிறது என்று பதி லளித்தார். கால்வாய்களின் ஜீரோ பாயிண்ட் முதல் இறுதி வரை தூர்வாரப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆணையாளர் தெளிவான பதிலளிக்காமல் சமா ளித்தார். மதுரை மாநகராட்சியின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 15 முதல் 18 டிராக்டர்களுக்குப் பணம் கொடுக்காததால் நிறுத்தப் பட்டுள்ளது என்றார். அதை நகர் பொறியாளர் அரசு மறுத்தார். மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு நிர்வாக ரீதியிலான விளக்கங்களை அளித்துச் சமாளித்தார் நகர் பொறி யாளர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் என்.விஜயா பேசுகையில், எந்தக் கேள்விக்கும் மேயர் பதிலளிப்பதில்லை.அதிகாரி கள் தான் பதிலளிக்கின்றனர்.மேயர் பதிலளிக்க வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதி இருட்டாக உள்ளது. விளக்குகள் பொருத்த வேண்டும். எனது வார்டில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. வார்டில் என்ன நடக்கிறது என்பதை மாமன்ற உறுப்பினர்களுக்கு அதி காரிகள் தெரிவிப்பதில்லை. கூட்டக்குறிப்புகளை இரண்டு நாட்க ளுக்கு முன்னதாக வழங்க வேண்டும். கொசு மருந்து மாதம் ஒரு நாள் மட்டுமே அடிக்கப்படுகிறது. இந்த வேலைக்காவது மாநகராட்சி ஊழி யர்களைப் பயன்படுத்துங்கள். டெண்டர் விட்டு விடாதீர்கள். சொத்து வரி, வீட்டுவரி உயர்த்தப்பட்ட நிலை யில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரி வசூலாகியுள்ளது. எந்தப் பணியும் நடைபெறவில்லை. டேபிள், சேர் வாங்குவதற்குக் கூட வழியில்லை. எனது வார்டில் மண்ணை எடுத்து விற்கிறார்கள் என்று கூறினார். மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் ஐந்தாவது மண்டலத் தலைவர் சுவேதா, அவனியாபுரம் ஜல்லிக் கட்டை விரிவாக்கப் பகுதிக்கு மாற்ற வேண்டுமென்றார். கேள்விநேரத் தின்போது பேசிய விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இன்குலாப், “ஜல்லிக்கட்டு யார் நடத்துவது என்பதிலேயே ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக் ட்டை விரிவாக்கப்பகுதிக்கு மாற்றுவது என்பது புதுப்பிரச்சனையை உரு வாக்கும். அலங்காநல்லூர், பால மேடு போல் பாரம்பரியமாக அவனியா புரம் ஜல்லிக்கட்டு தற்போது நடை பெறும் இடத்திலேயே தொடர வேண்டும் என்றார். 63-ஆவது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மாடுகள் தொல்லை, பன்றிகள் தொல்லை, நாய்கள் தொல்லை குறித்துப் பேசினார். எனது வார்டில் எத்தனை நாய்கள் பிடிக்கப் பட்டுள்ளது என்றார். அதற்கு மேயர், இனம் வாரியாகப் பட்டியல் உள்ளது என்றார். தொடர்ந்து, 63, 64-ஆவது வார்டில் ஒன்பது நாய்கள் பிடிக்கப் பட்டுள்ளது என்றார்.