திருவட்டார், அக்.25- கன்னியாகுமரி மாவட்ட உழைக்கும் மக்க ளின் பாசத்துக்குரிய தலைவராக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய மான தலைவர்களில் ஒருவரான தோழர் பி. திவாகரனின் 20 ஆம் ஆண்டு நினைவுதினம் அக்டோபர் 25 செவ்வாயன்று மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. செறுகோலில் உள்ள அவரது நினை விடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமை யில், மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், எஸ்.ஆர்.சேகர், என்.எஸ்.கண்ணன், வி.அனந்தசேகர், மூத்த தலைவர்கள் என்.முருகேசன், கே.மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், வட்டாரச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அன்னாருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.