சென்னை,பிப்.4- பிப்ரவரி 19 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுள்ளது. வேட்புமனு பரி சீலனை நடைபெற்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு வும் நிறைவுற்று, பிப்ரவரி 7 அன்று போட்டியிடுகிற அதிகாரப்பூர்வ வேட்பா ளர்களின் பட்டியல் வெளியிடப்பட வுள்ளது. வேட்புமனு பரிசீலனையின் போது கணக்கில் கொள்ள வேண்டிய முக்கியமான விசயங்கள் குறித்தும், மாநிலம் முழுவதும் இருந்து வந்தி ருக்கக் கூடிய கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவை குறித்து பிப்ரவரி 4 வெள்ளிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் ஆகியோர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வி. பழனிக்குமாரை சந்தித்து உரை யாடினர். அது குறித்த விபரங்கள் கீழ்வருமாறு: J சட்டமன்ற / நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகளின் போது இருந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் இந்த தேர்தலில் வழங்கப்பட வில்லை. எனவே, அவர்களுடன் உதவி யாளர் ஒருவரை வாக்குச் சாவடிக்குள் அனுமதிப்பதும், வரிசையில் நிற்கா மல் செல்ல அனுமதிப்பதும் வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத் தோம். அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள் ளது. எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு சிறப்புச் சலுகைகள் கிடைக்கப் பெற ஆவன செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இது போலவே மின்னணு வாக்கு இயந்தி ரத்தில் வழங்கப்பட்டு வந்த வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கும் எதிர்காலத்தில் முயற்சி செய்யப்படும் என தெரிவித்தார். J வேட்பு மனுத்தாக்கலின் போது அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் என்பதற்கான மாநிலச் செயலாளர் கையெழுத்திட்ட படிவம் ஏ நகல் வடிவத்திலும், மாவட்டச் செய லாளர் கையெழுத்திட்ட படிவம் பி அசல் வடிவத்திலும் வழங்கினால் போது மானது என்பதை ஆணையர் ஏற்றுக் கொண்டார். J இணைப்பு படிவங்களான Affidavit, Form 3 உள்பட படிவங்கள் தட்டச்சு செய்யப்படலாம் அல்லது கையால் நிரப்பப்படலாம் என்பது அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. J நோட்டரி பப்ளிக் கையொப் பம் பெற்ற 20 ரூபாய் முத்திரைத்தாளில் நிரப்பப்பட்ட வாக்குமூலத்தில் சரத்துகள் எவற்றிற்கும் ஆதாரமோ, அத்தாட்சியோ கோருவது தேவை யற்றது. சட்டவிதிகளின் படியும், வழிகாட்டும் விதிகளின் படியும் அது அவ்வாறே இருப்பதால் ஆணையர் அதை ஏற்றுக் கொண்டார். குறிப்பாக, காவல்நிலையத்தில் எந்த சான்றிதழும் பெற வேண்டியதில்லை என்பதை மாவட்ட ஆட்சித் தலை வர்கள் அனைவருக்கும் தெரிவித்தி ருப்பதாகவும் கூறினார். J சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது நடைமுறையில் இருக்கிற வேட்பாளர் குற்றப் பின்னணி குறித்த பத்திரிகை / ஊட கங்களில் விளம்பரம் செய்வது என்பது உள்ளாட்சி வார்டுகளில் போட்டியிடுப வர்களுக்கு பொருந்தாது எனவும் அவர் தெரிவித்தார். J ஏற்கனவே பொதுக்கூட் டங்கள், அரங்க கூட்டங்கள் நடத்து வதற்கு அனுமதியும் அதுகுறித்த வழி காட்டுதல்களும் ஆணையத்தால் வெளி யிடப்பட்டுள்ளது, அதன்படி பொதுக் கூட்டங்களில் 1000 பேரும், அரங்க கூட்டங்களில் 500 பேரும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கலந்து கொள்ளலாம். வாக்கு சேகரிக்க 20 பேர் வரை செல்லலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. J பண பலத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்திடவும், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுத்துநிறுத்த வும், ஏலம் விடும் அடிப்படையில் வார்டு களை நபர்கள் பிரித்துக் கொள்வதை தடுக்கவும் ஆணையம் சீரிய முயற்சிக ளை எடுத்து வருவதாக தெரிவித்தார். J வேட்பு மனு பரிசீலனை செய் யும் அதிகாரிகள் பாரபட்சமற்ற முறை யில் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு உரிய அவகாசமும், வாய்ப்புகளும் வழங்கி வேட்புமனுக்களை உரிய முறையில் ஏற்றுக்கொள்ளுமாறு அதி காரிகளுக்கு தெரிவித்திருப்பதாகவும் ஆணையர் கூறினார்.