விருதுநகர், மார்ச் 26- ஒன்றிய பாஜக அரசா னது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இத னைக் கண்டித்தும், சாதாரண ஏழை எளிய மக்கள் பயன் படுத்தி வரும் சமையல் எரி வாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண் டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் ஒன்றியம், கோட்டையூரில் கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சேது ராமசாமி தலைமையேற் றார். துவக்கி வைத்து தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை சிறப்புரையாற்றினார். மேலும் இதில், சங்கையா, முத்துமுனியாண்டி ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.