districts

பாதாள சாக்கடை திட்ட குளறுபடிகளை சரி செய்க!

திண்டுக்கல், செப்.1- திண்டுக்கல் மாநகராட்சி யில் பாதாள சாக்கடை திட்ட செயல்பாட்டில் நடை பெறும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் பேசினர்.  திண்டுக்கல் மாமன்ற கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாமன்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் கே.எஸ்.கணே சன் பேசுகையில், ‘‘பாதாள சாக்கடைப் பணிகள் குளறு படிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் பணம் செலுத்தியும் பாதாள சாக்கடை நிறைவேற்றப்ப டாமல் உள்ளது.  எனவே பணம் கட்டிய வர்கள் குடியிருப்புகளுக்கு உடனடியாக பாதாள சாக்க டை இணைப்பு வழங்க வேண்டும். மேலும் மாநக ராட்சி பகுதியில் நாய்கள், மாடுகள் பிரச்சனை அதிக மாக உள்ளது’’ என்றார். இதற்கு நடவடிக்கை எடுப்ப தாக மேயர் உறுதியளித்தார்.  சிபிஎம் கவுன்சிலர் மாரி யம்மாள் பேசுகையில், ‘‘அபிராமி அம்மன் கோவில் சுற்றி வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. அப்படி நடக்கும் போது சாலை யோர வியாபாரிகள் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு  வேலை துவங்க வேண் டும்’’ என்றார். இக்கூட்டத் தில் சிபிஎம் கவுன்சிலர் ஜோதிபாசு, திமுக, கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.