மதுரை, டிச.29- மதுரை மாவட்டம் அவனி யாபுரம் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவர், செவிலியர் களை பணியில் அமர்த்தி, 24 மணி நேரமும் செயல்படுத்த வேண் டும். சுகாதார நிலையத்தில் நில வும் மருந்து, மாத்திரைகளின் தட்டுப்பாட்டை போக்கிட வேண் டும். சிந்தாமணி, மீனாட்சிநகர், ஐராவதநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட மாநகராட்சி வார்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர மைக்க வேண்டும். அவனியா புரம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதி களில் பாதாள சாக்கடை திட் டத்தை அமல்படுத்த வேண்டும். வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவனியாபுரம் தெற்கு தாலுகாக் குழு சார்பில் அவனி யாபுரம் மந்தையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாச் செயலாளர் ஏ.தனபாலன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி. இளங்கோவன், தாலுகா குழு உறுப்பினர் எம்.சேதுராமு ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தாலுகாக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.