districts

img

மழை நீரை கூடுதல் மோட்டார்களை கொண்டு அகற்ற சிபிஎம் கோரிக்கை

தூத்துக்குடி, டிச.4- தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி பஞ்சா யத்துக்குட்பட்ட பாலதண்டா யுதம் நகர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராஜா ஒன்றிய செய லாளர் சங்கரன் மாவட்டக் குழு உறுப்பினர் முத்து ஆகியோர் நேரில் பார்வை யிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர், மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து தலை வர் சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லரை சந்தித்து பாலதண்டா யுதம் நகர், சத்யா தியேட் டர் ஆகிய பகுதிகளில் தேங்கி யுள்ள மழை நீரை கூடுதல் மோட்டார்களை கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.