districts

img

குப்பையில்லா தெருக்களை உருவாக்குவோம்

திண்டுக்கல், நவ.1- குப்பையில்லா தெருக்  களை உருவாக்க தீவிர நட வடிக்கை எடுக்கப் போவ தாக திண்டுக்கல் மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர்கள் வார்டு களில் நடைபெற்ற நகரசபை கூட்டங்களில் பொதுமக்களி டம் உறுதியளித்தனர்.  திண்டுக்கல் மாநகராட்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 2 ஆவது  வார்டு கவுன்சிலர் கே.எஸ்.கணேசன் வார்டில் நகர சபைக்கூட்டம் நடைபெற் றது. செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை மற்றும் மேற்கு அசோக் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்  டங்களில் கவுன்சிலர் கே.எஸ்.கணேசன், வரு வாய் அதிகாரி வெங்கட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மக்களிளிடம் மனுக்களை பெற்றனர். 82 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்க ளில் 26 மனுக்கள் இலவச வீட்  டடி மனை, 8 விதவை பென்  சன், 18 முதியோர் பென்சன், 2 ரேசன் கார்டு என்று கோரிக்கைகள் மனுக்களாக கொடுக்கப்பட்டன. இப்பகு தியில் நூலகம் வேண்டும் என்று முன்னாள் வங்கி ஊழி யர் சம்மேளனத்தலைவர் விஸ்வரூபன் மனுக்கொடுத் தார். இதே போல் 13 ஆவது கிராஸ் பகுதியில் அடையா ளம் தெரியாதவர்கள் திரிவ தாகவும், அதன் மீது காவல்  துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2 பூங்காக்களில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், துப்புரவு பணியா ளர்களை கூடுதலாக வார்டு  பகுதியில் நியமித்து குப்பை களை அகற்ற வேண்டும் என்  றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

கவுன்சிலர் கே.எஸ். கணேசன் கூறுகையில், 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த  நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, மழைநீர் சேகரிப்பு போன்ற  திட்டங்களுக்கு மாநக ராட்சிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. செவாலியே சிவாஜி கணேசன் நகரில் நீண்டகால பிரச்சனையாக இருந்த பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2வது  வார்டை குப்பையில்லா வார்  டாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .பொது மக்கள் கொடுத்த மனுவின் மீதும் மாநகராட்சி தலை யிட்டு தீர்த்து வைக்க உள் ளது என்று தெரிவித்தார்.  இதே போல் 11 ஆவது வார்டு சபைக்கூட்டம் லைன் தெருவில் நடைபெற்றது. சிபிஎம் மாமன்ற உறுப்பினர் மாரியம்மாள், சுகாதார ஆய்வாளர் கீதா ஆகியோர் பங்கேற்றனர். 200க்கும் மேற்  பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 122 மனுக்  கள் பெறப்பட்டன.

விதவை பென்சன், முதியோர் உத வித்தொகை, கழிவு நீர் ஓடை, ஓடை மண் எடுத்தல், பாதாள சாக்கடை பிரச்சனை என மனுக்கள் பெறப்பட்டன. சிபிஎம் நகரக்குழு உறுப்பி னர் எம்.கிருஷ்ணன் கலந்து கொண்டார். சிபிஎம் மாமன்ற உறுப்பினர் மாரியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் கோரிக்கை களில் பெரும்பாலும் குப்பை  மற்றும் பாதாள சாக்கடை பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். சுந்தரம்  செட்டிசந்து பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யப்பட்டது. அபி ராமி அம்மன் கோவில் பகு தியில் உள்ள ஓடைகளில் உள்ள மண் எடுக்கப்பட்டது. வார்டு பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளும் சீர மைக்கப்பட்டுள்ளது. கச்  சேரி தெருவில் பொக்லைன் இயந்திரம் மூலம் 3 நாட்கள் கழிவு நீர் ஓடை சரி செய்யப்  பட்டது. காந்தி மார்க்கெட்டில் உள்ள குப்பைகளை சாலை களில் போடுவதை அங்  குள்ள மார்க்கெட் சங்கத்  தலைமையிடம் பேசி குப்பை களை மார்க்கெட்டுக்குள் ளேயே மாநகராட்சி ஊழி யர்களை வைத்து வாங்கிச் செல்வதால் காந்தி மார்க்கெட் சுகாதாரத்துடன் விளங்கு கிறது. இதே போல் மார்க்  கெட் மக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம்  தயாரிக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வா கத்தை வலியுறுத்த உள்ள தாகவும், ஏற்கனவே மக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பைக்கிடங்கில் மின்சா ரம் தயாரிக்கும் பணியை மீண் டும் துவங்க நடவடிக்கை  எடுக்க உள்ளதாகவும் சிபிஎம் மாமன்ற கவுன்சிலர் மாரி யம்மாள் தெரிவித்தார். 

35வது வார்டுக்கான நகர சபைக்கூட்டம் அண்ணா காலனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எஸ். என்.ஜோதிபாசு, மாநக ராட்சி அதிகாரி வெங்கடே சன் ஆகியோர் பங்கேற்ற னர். 120 பேர் கலந்து கொண்ட னர். இதில் 13 மனுக்கள் பெறப்பட்டன. 350 பேர்களுக்கு  இலவச வீட்டடி மனை, பட்டா வழங்க வேண்டும். 60 குடும்  பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.  சபையில் கலந்து கொண்ட பெரும்பாலான மக் கள் ஒத்தக்கண் பாலத்தில் மழை காலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்ற துரித நட வடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண் டும். லெப்பைக்குளத்தில் மழைநீர் ஓடை கட்ட வேண்  டும். மாமன்ற உறுப்பினராக ஜோதிபாசு தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு லெப்பை குளத்தை தூர் வாருவதற்கு ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அதே போல் முத்துச்சாமி  குளத்தில் நடைபயண மேடை அமைக்கும் பணி  நடைபெறுகிறது. இதற்காக  ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது. 600க்கும் மேற்பட்ட வர்களுக்கு 100 நாள் வேலை வாங்கித்தரப்பட்டுள்ளது. ராஜலட்சுமி நகர், சாமியார் தோட்டம், அண்ணா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சிறு பாலங்கள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜோதிபாசு தெரி வித்தார். (நநி)