districts

img

ஹார்விபட்டியில் மூடிக்கிடக்கும் அரசு உதவிபெறும் ஆரம்ப-உயர்நிலைப்பள்ளியை திறந்திடுக!

ஜூலை 30-  மதுரை மாவட்டம் ஹார்வி பட்டியில் மூடிக்கிடக்கும் அரசு உதவிபெறும் ஆரம்  பப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியை திறக்க மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 96 ஆவது  வார்டு கவுன்சிலர் என்.விஜயா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: கடந்த 1943-ல் ஏ 1303 கூட்டுறவு சொசைட்டி மூலம் ஹார்விபட்டி என்ற ஊர் மதுரை கோட்ஸ் மில் தொழி லாளர்களுக்கு உருவாக் கப்பட்ட போது அங்கே ஆரம்பப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி ஏற்படுத்தி  நடத்திட 99 வருட லீஸ்க்கு  மதுரை கோட்ஸ் நிர்வாகத் திற்கு சொசைட்டி மூலம் இடம் கொடுக்கப்பட்டது. மேற்படி இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அரசின் உதவிபெற்று இயங்கி வந்த ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை அர சின் அனுமதி பெறாமல் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்கு புறம் பாக பங்காரு அம்மாள் அறக்கட்டளை என்ற தனியா ருக்கு லீஸ் மற்றும் விற்பனை மூலம் மதுரை கோர்ட்ஸ் நிர்வாகம் உரிமம் மாற்றிக் கொடுத்தது. மேற்படி நிர்வாகத்தால் ஆரம்பப்பள்ளி தனியாக வும், நடுநிலைப்பள்ளி உயர்  நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும் இயங்கி வந்தது. தற்சமயம் நிர்வா கச் சீர்கேட்டால் கடந்த 2 வருடமாக மூடிக்கிடக்கிறது. இந்த பகுதியில்  20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வசிக்கின்றனர். தற்போது  இந்த பள்ளி மூடப்பட்டுள்ள தால் இந்த பகுதியில் உள்ள  பள்ளி மாணவ, மாணவியர் தொலைவில் போய் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. மூடிக்கிடக்கும் பள்ளியின் கட்டமைப்பு போல் இந்தியாவில் வேறு எங்கும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே  மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மூடிக்கிடக்கும் பள்ளியை அரசே ஏற்று நடத்த ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.