மதுரை, ஜூலை 26- மதுரை மாவட்டம் திருப்பரங்குன் றம் வட்டம் ஹார்விபட்டி பகுதியில் நத் தம் புல எண்களில் உள்ள காலியிடம் தவிர்த்து இதர 604 வீடுகளுக்கு பத்தி ரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை 96 ஆவது வார்டு கவுன்சிலர் என்.விஜயா வலி யுறுத்தியுள்ளார. இதுகுறித்து அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம் கிராமத்தில் ஏ - 1303 மதுரை மில்ஸ் கோவாப்பரேடிவ் ஹவுசிங் சொசைட்டி பெயரில் பட்டா தாக்கலாகியுள்ள புலங்களில் பத்திர பதிவு மேற்கொள்ள தாங்கள் தடை விதித்துள்ளீர்கள். (ந.க.எண். 37433 /2022/ ஜே 1. நாள் ---07. 2022) தாங்கள் விதித்துள்ள தடையில் திருப்பரங்குன்றம் கிராமம், பட்டா எண் 6137-ல் கட்டுப்பட்ட புலங்களில் மேற் கண்ட ஹவுசிங் சொசைட்டியால் கட்டி தொழிலாளர்களுக்கு கிரையம் கொடுக்கப்பட்ட சுமார் 604 வீடுகள் உள் ளிட்ட 66.6 ஏக்கர் நிலம் கட்டுப்படுகிறது. இதனால் மேற்சொன்ன வீடுகளுக்கு கட்டுப்பட்ட பகுதியில் பத்திரப்பதிவு ஏதும் செய்ய முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் அவசர தேவை நிமித்தமாக மேற்சொன்ன 604 வீடு களில் கட்டுப்பட்ட இடங்களை வாங்கு வது, விற்பது, வங்கியில் அடமானம் வைப்பது மற்றும் வாரிசுதாரர்களுக்கு உயில் எழுதுவது உள்ளிட்ட திருப்ப ரங்குன்றம் சார்பதிவாளர் அலுவல கத்தில் எந்த பதிவும் செய்ய முடியாமல் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் மேலே சொன்ன பட்டா எண் 6137-ல் உள்ள நத்தம் புல எண்களில் உள்ள காலியிடத்திற்கு மட் டும் புதிய பத்திரப் பதிவிற்கு தடை விதித்தும் ஏற்கனவே உள்ள 604 வீடு களுக்கு உள்ள பத்திரப்பதிவிற்கான தடையை நீக்கி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.