நாகர்கோவில், பிப்.12- வரைமுறையின்றி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப் பட்டிருந்த நிலையில், பாதிப்பு ஏற்படுத்திய கடைகளை மூட தன்னெழுச்சியான போராட்டங்களில் தமிழக மக்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அப்படி நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை வகித்தது. இப்போராட்டங்களில் வழிகாட்டிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக மக்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் 7 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஜெயராணி கூறுகை யில், மணவாளக்குறிச்சி ஜங்சனில் கோயில், பள்ளிக் கூடம் ஆகியவற்றுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப் பட்டிருந்தது. பொதுமக்களுக்கு இடையூறு மட்டுமல்லாது தேவை யற்ற மோதல்களுக்கும் இது வழிவகுத்தது.
மாணவர்களும் பெண்களும் பாதிக்கப்பட்டனர். இந்த கடையை அகற்றக்கோரி மக்களுடன் இணைந்து நடத்திய போராட்டத்தால் படநிலம் பகுதிக்கு காவல்துறையின் துணையுடன் மாற்றினார்கள். கடையை திறக்க விடாமல் அங்கும் கஞ்சிவைத்து இரவு-பகலாக நடத்திய போராட் டத்தால் இடம் மாற்றி தாமரை குளம் அருகில் திறக்க முயன்ற னர். அதுவும் தடுக்கப்பட்டது. கடையை திறக்க முடியாத நிலை யில் கிளப் என்கிற பெயரில் தனியார் கல்யாண மண்டபத்தில் பார் நடத்தி வருகிறார்கள். அந்த பகுதி மக்களிடமும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி மதுவற்ற பகுதியாக மாற்றுவோம் என்றார். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் உறுதியாக நின்ற வர்கள் தற்போது சிபிஎம் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 3 ஆவது வார்டில் ஏ.ரவிக்குமார், 8 ஆவது வார்டில் ஏ.ஜெயக்குமார், 10 ஆவது வார்டில் டி.பின்னி போஸ்கோ ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் கட்டுமானம், தையல், ஆட்டோ, முறைசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் நலத் திட்டங்கள் பெற்றுத்தருதல் போன்ற மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். கோவிட் பெருந்தொற்று மற்றும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களின்போது மக்களுடன் நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். வாக்கு சேகரிப்பின்போது மக்கள் இவற்றை ஆமோதித்து ஆதரவளித்து வருகிறார்கள். குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ள சுடுகாடு மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் மயானமாக மாற்றி அமைக்கப்படும், புதுக்குளம் படித்துறை சீரமைக்கப்பட்டு அங்கு ஏற்படும் சுகாதார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
மணவாளக் குறிச்சி பேரூ ராட்சியில் 5 ஆண்டுகள் தலைவராக பணியாற்றிய வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன். அவர் கூறுகையில், ‘‘மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட பேரூராட்சியில் இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டன. பல இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. முதல் முதலாக எவ்வித முறைகேடும், சிபாரிசும் இல்லாமல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. வடக்கன்பாகம் மக்களுக்கு பொதுக் குழாயில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் உப்பு நீராக இருந்ததை மாற்றி புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நல்ல குடிநீர் வழங்கப்பட்டது’’ என்றார்.