கொல்லங்கோடு, பிப்.13- கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது கொல்லங்கோடு நகராட்சி. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 33 வார்டு கள் உள்ளன. கொல்லங்கோடு நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் இது. பேரூராட்சியாக இருந்தபோது 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப் பில் இருந்தது. தலைவராக பி.விஜய மோகனன் பொறுப்பு வகித்துள்ளார். இந்தப் பகுதியில் சாதி-மத அரசியலுக்கு அப்பாற் பட்டு மக்களின் நேசத்துக்குரியதாக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட்சி இருந்து வருகிறது. கொல்லங்கோடு பேரூராட்சியில் தொ டர்ந்து கட்டிக்காத்து வந்த பாரம்பரியமும். நேர்மையான நிர்வாகமும் 2016 க்கு பிறகு காற்றில் பறக்கவிடப்பட்டது. கொல்லங் கோடு மக்களின் அடிப்படை தேவைகளை யும் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதில் முன்நிற்க வேண்டியவர்கள் கிடைத்தது போதும் என சுருட்டினர்.
இதற்கு முடிவுகட்ட தேர்தலை மக்கள் எதிர்பார்த்திருந்த நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மையான அதிகாரத்தை நகாராட்சியில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வாக்காளர்கள் கூறினர். மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையிலும், கொல்லங்கோடு மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கின்றனர். ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய பேரூராட்சிகளை இணைத்து கொல்லங் கோடு நகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 32 இடங்களில் சிபிஎம் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூ ராட்சித் தலைவராக பொறுப்பிலிருந்த வி. விஜயமோகனன் கூறுகையில், 12 படிப்ப கங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக படிப்பகங்கள் பூட்டப் பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். ஏவிஎம் கால்வாயின் இரு பக்கமும் மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கால்வாய் ஒரு காலத்தில் போக்குவரத்துக்கும் மீனவ சமூக மக்கள் குளிப்பதற்காகவும் பயன்பட்டு வந்தது. தற்போது இந்தக் கால்வாய் அசுத்த மாக உள்ளது அதைச் சீரமைக்க வேண்டும். வள்ளவிளை, கல்லடி, மேடவிளாகம் பகுதி யில் கயிறு உற்பத்தி நடைபெற்றது. தற்போது அந்தத் தொழில் நலிந்து வருகிறது. கயிறு உற்பத்திக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். கொல்லங்கோடும், ஏழுதேசமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு கண்கள். இப் பகுதிகள் நகராட்சியாக உயர்த்தப் பட்டுள்ளதால் வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயரும் என்ற அச்சம் மக்களி டம் உள்ளது. வரியை உயர்த்தாமல் பிற வழி களில் வருவாய் ஈட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரிய நடவடிக்கையை நிச்சயம் மேற்கொள்ளும் என்றார்.
ஏழுதேசம் பேரூராட்சியின் தலைவராக பத்தாண்டுகள் பொறுப்பு வகித்தவர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி. இவர் 15 ஆண்டுக ளாக வைக்கலூர் கூட்டுறவு சங்க தலைவ ராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் கூறு கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் இங்குள்ள மக்கள். நகராட்சி உறுப்பின ருக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே மக்கள் பணியாற்றி நன்கு அறிமுகம் ஆனவர்கள். கொல்லங் கோடு கூட்டுறவு சங்க தலைவர் ஹரி உள்ளிட்ட அனைவரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். ஏற்கனவே இரண்டு பேரூராட்சி களிலும் பொறுப்பு வகித்த காலத்தில் செய்த பணிகளை நினைவில் கொண்டு மக்கள் நிச்சயம் சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றார். சுமார் 15 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வளர்ச்சிப் பணிகளை அனைத்துப் பகுதி களுக்கும் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்வோம் என்ற உறுதியோடு களமாடி வருகிறது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சிபிஎம் வேட்பா ளர்கள் அனைவரும் தொடர்ந்து மக்கள் பிரச்ச னைகளுக்காகப் போராடி வருபவர்கள் தான். தற்போது கிடைக்கப்போகும் வாய்ப்பு மக்க ளுக்கு கூடுதல் பலனைத் தரும்.