சின்னாளபட்டி, பிப்.13- நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் திண் டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூ ராட்சியில் 4 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.கே.முரு கன் போட்டியிடுகிறார். பேரூராட்சி முழுவதும் மக்களால் நன்கு அறியப்பட்ட, வார்டு கவுன்சிலராக இருந்து பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துள்ள வி.கே.முருகன் நமது நிருபரிடம் கூறியதாவது: கடந்த முறை வெற்றிபெற்ற பிறகு ஏடிஎஸ் நகரில் கஸ்தூரிபா மருத்துவ மனை முதல் தம்பித் தோட்டம் பள்ளிக்கூடம் வரை பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. ஏடிஎஸ் நகரில் பூங்கா அமைக்க வேண்டும் என சிறப்பு நிலை பேரூராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து பூங்கா அமைக்கப்பட்டது. ஏடிஎஸ் நகரில் அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஏடிஎஸ் நகர், நேருஜி நகர் , ஆர்.எம்., டி.சி. காலனி முத்து நகரில் அனைத்து தெருக்க ளுக்கும் தார்ச்சாலை போடப்பட்டது. துப்பு ரவு தொழிலாளர்கள் குடியிருக்கும் காலனி யில் நான்கு தெருக்களுக்கும் குடிதண்ணீர் குழாய் அமைத்து குடிதண்ணீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டது. வருங்காலங்களில் ஏடிஎஸ் நகரில் பார்க் உள்ள இடத்தில் முன்பு உயர் கோபுர விளக்கு வசதியும் போர்வெல் தண்ணீர் வசதியும் செய்து கொடுப்போம். கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து ஏடிஎஸ் நக ருக்குள் மழைநீர் செல்லாமல் நடவடிக்கை எடுப்போம். தெருச் சாலைகள் மற்றும் சாக்கடைகளை மேம்படுத்த உரிய நட வடிக்கை எடுப்போம். துப்புரவுத்தொழிலா ளர்கள் காலனியில் புதிய பெண்கள் கழிப்ப றையும் ஆண்களுக்கு தனியாக கழிப்பறை யும் கட்டித் தர நடவடிக்கை எடுப்போம். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்த வார்டில் குடிநீர், சாலை வதி மற்றும் அடிப் படை வசதிகளை செய்துதர பணி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.