மதுரை, மார்ச் 26- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தோழமைக் கட்சி, தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளை செவ்வாயன்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டி னார். தொடர்ந்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு சால்வை, மாலை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் தங்களுடைய ஆதரவை தெரி வித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளான தலைவர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், கௌரவ செயலாளர் எஸ்.சாய் சுப்பிரமணியம், பொரு ளாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டி னார். தொடர்ந்து சங்க நிர்வாகிகளும் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவை தெரிவித்தனர்.
இதில் சங்க நிர்வாகிகள் கௌரவ ஆலோச கர் எஸ்.பி.ஜெயபிரகாசம், துணைத்தலைவர் என்.கிரிதரன் ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.