மதுரை, பிப்.13- மதுரை பரவை பேரூராட்சி 14-ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.மகாலிங்கம் சனிக்கிழமையன்று வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்காளர் களிடம், பரவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துதல், பேரூராட்சி பகு தியில் குடிநீர் வசதியை ஏற் படுத்துதல் போன்ற கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பாலகிருஷ்ணன், சி.மலர்விழி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் து.ராமமூர்த்தி, கே.முருகேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.