மதுரை, செப்.6- மோடி தலைமையிலான ஒன் றய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்.7 (வியாழனன்று) மாநிலம் முழுவதும் ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக மதுரை புறநகர் மாவட்ட புறநகர் பகுதி களில் மறியலை விளக்கி பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வரு கின்றன. கிழக்கு தாலுகா குழு சார் பில் யா.ஒத்தக்கடையில் துவங்கி யா.நரசிங்கம், கடச்சனேந்தல், சுந் தர் ராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைகரைபட்டி, மாங்குளம் பூசாரிபட்டி, பொருசு பட்டி, கல்மேடு, சக்குடி, சக்கிமங்க லம், கருப்பாயூரணி ஆகிய 26 இடங்களில் மறியலை விளக்கி வேன் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தினை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் துவக்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக் கண்ணு, மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலு காச் செயலாளர் எம்.கலைச்செல் வன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல், மேற்கு ஒன்றியக் குழு சார்பில் சமயநல்லூர், பரவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய், மேற்கு ஒன்றியச் செயலா ளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ் ணன், எஸ்.மலர்விழி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.