தருமபுரி, ஜன.6- பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவம னையை தரம் உயர்த் தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர் சினியிடம் முறையிட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர் கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் நியமிக்கப்பட வில்லை. சிடி ஸ்கேன் 12 மணி நேரம் மட்டுமே எடுக்கப்படு கிறது. எனவே 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் இயங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். ரத்த வங்கியினை மீண்டும் செயல் படுத்த வேண்டும். தேவையான கண் மருத்துவர்கள், சிறுநீர கப் பிரிவு, இதயபிரிவு, தோல் மருத்துவ பிரிவு, மகப்பேறு மருத்துவர்கள் நியமித்து, 24 மணி நேரமும் இயங்கும் மருத்து வமனையாக தரம் உயர்த்த வேண்டும். மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ள 7 மாடி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தை பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், வே.விஸ்வநா தன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் மனு அளித்தனர்.