கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சிபிஎம் அகில இந்திய மாநாடு, மாநில மாநாடு முடிவுகள் குறித்த விளக்க கூட்டம் ஞாயிறன்று (ஜுலை 3) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் விளக்கி பேசினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.