மதுரை, மே 18- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை எனும் உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மக்களுக்கு இனிப்பு களை வழங்கினார். தீர்ப்பை வரவேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுரை தமுக்கம் மைதா னம் முன்பு உள்ள தமிழன்னை சிலை முன்பு கொண்டாட்ட நிகழ்வு கள் வியாழனன்று நடைபெற்றது. தமிழன்னை சிலைக்கு நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், துணை மேயர் டி. நாகராஜன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் டி. செல்வா, தலைவர் அ. பாவேல் சிந்தன், பொருளாளர் எஸ். வேல் தேவா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க. பாலமுருகன் ஆகி யோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில் “ஜல் லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். உச்ச நீதிமன்ற வழக்கிற்கு தேவை யான அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் செய்தார். ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம், மீண்டும் தமி ழக முதல்வரிடம் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆ. பாலமுருகன் ஆகியோர் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு வழக்கு வெற்றியை கொண்டாடினர்.