districts

img

விருதுநகர் மக்களுக்கு உப்புச் சுவையுடன் குடிநீர் வழங்குவதா?

விருதுநகர், ஜன.25- பொது மக்களுக்கு உப்பு சுவை யுடன் குடிநீர் வழங்குவதை கண் டித்து விருதுநகர் நகராட்சிக் கூட் டத்தில் மன்ற உறுப்பினர்கள் சர மாரியாக கேள்வி எழுப்பினர். விருதுநகர் நகராட்சியின் அவ சரக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத்  தலைவர் தனலட்சுமி, ஆணையா ளர் ஸ்டான்லிபாபு, பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: நகராட்சிப் பகுதியில் குப்பை களை அகற்றும் பணிகள் முழுவதை யும் தனியார் மூலம் செய்வதற்கான தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜெயக்  குமார் ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து, தற்போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 61 பேர்  மட்டுமே உள்ளனர். இதே நிலைதான்  தமிழ்நாடு முழுவதும். எனவே, தனி யார் மூலம் குப்பைகளை அகற்ற அனைத்து நகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என ஆணையாளர் தெரிவித்தார். தனது வார்டு பகுதியில் பாகம்  எண் 159 இல் உள்ள 200 வாக்காளர் கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினசரி 20 பேர் எனது வீட்டிற்கு வரு கின்றனர். இதற்கு தலைவரும், ஆணையாளரும் தான் பொறுப்பு என அதிமுக உறுப்பினர் சரவணன் புகார் தெரிவித்தார்.

வாக்காளர்கள் நீக்கம் குறித்து ஆய்வு

அதற்கு பதிலளித்த ஆணையா ளர், வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது அனைத்தும் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு மூலம் செய்யப்படுகிறது. இதற்கும் நகராட்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் உறுப்பி னர் சித்தேஸ்வரி தற்போது வெளி யான வாக்காளர் பட்டியலில் எனது  பெயரையும் காணவில்லை என புகார் தெரிவித்தார். இதையடுத்து பேசிய தலைவர், இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். நகரின் மேற்கு பகுதியில் தற் போது வரை உப்பு சுவையுடன் கூடிய  குடிநீரை வழங்குவது ஏன்? தாமிர பரணி குடிநீரை பாரபட்சமாக ஒரு  சில வார்டுகளுக்கு மட்டும் ஏன்  வழங்குகிறீர்கள்? எனவே, அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக குடி நீரை வழங்க நடவடிக்கை வேண்டும் என உறுப்பினர்கள் முத்துராமன், பால்பாண்டி, ஜெயக்குமார், முத்து லட்சுமி, மதியழகன், செல்வரத்னா, மாலதி, ஹேமா, மஞ்சுளா, ரம்யா உள்ளிட்ட பலர் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தலைவர், ஆணைக்குட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் 2 மாதங்களுக்கு முன்பு நல்ல நிலையில் இருந்தது. தற் போது உப்பு நீராக மாறிவிட்டது. கோடைகால நீர்த் தேக்கத்தில் உள்ள தண்ணீரில் உப்பு சுவை  குறைவாகவே உள்ளது. எனவே, அதை மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய லாம் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட உறுப்பி னர்கள், ஒண்டிப்புலி நீர் தேக்கத்தில் 80 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள் ளது. எனவே, அதை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் என தெரி வித்தனர். அதற்கு பதிலளித்த பொறியா ளர், ஒண்டிப்புலி தண்ணீரும் குடிப்ப தற்கு உகந்தது அல்ல. புதிய தாமிர பரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி கள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என குடிநீர் வடிகால்  வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள னர் என்று தெரிவித்தார். இதையடுத்து பேசிய உறுப்பி னர்கள், அதுவரை, இரு பகுதிகளுக்  கும் ஆணைக்குட்டம் மற்றும் தாமிர பரணி தண்ணீரை சம அளவில் வழங்க  நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை வைத்தனர். பின்பு, பேசிய உறுப்பினர் ஆறு முகம், தினசரி குடிநீர் வழங்குவது நக ராட்சியின் கடமை. 10 நாள், 20 நாள்  இடைவெளியில் தண்ணீர் வழங்கி னால் நகராட்சி எதற்கு? நல்ல குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில் அனைவரும் பொது மக்களுக்கு பதில் கூற வேண்  டிய நிலை ஏற்படும் என எச்சரித் தார். தனது வார்டு பகுதியில் குடிநீரு டன் கழிவு நீர் கலந்து வருவதாக உறுப்பினர் ராமச்சந்திரன் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், நேரில் வந்து ஆய்வு செய்து நல்ல தண்ணீர் வழங்க நட வடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.