districts

மதுரை விரைவு செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்து பெண்ணை தாக்கிய கவுன்சிலர் கைது 

திருவில்லிபுத்தூர், மே 24-  திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் சிவஞானம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் வைரமுத்து ( 35)  இவர் இந்த ஊரில் மருந்தகம் வைத்துள்ளார். கடந்த 22ஆம் தேதி வைரமுத்துவை மம்சாபுரம் பேரூராட்சியின் 2வது வார்டு கவுன்சிலர் பல்க்ராஜா என்பவர் அலை பேசி மூலம் ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைரமுத்து தனது மனைவி கோகிலா (வயது 29) உடன் சென்று  மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மம்சாபுரம் கல்மண்டபம் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த பல்க்ராஜா, வைரமுத்து மற்றும் அவரது மனைவி கோகிலா ஆகிய இருவரையும் வழி மறித்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கோகிலாவின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து மனைவி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் காவல் நிலையத்தில் பேரூ ராட்சி கவுன்சிலர் பல்க் ராஜா மீது வழக்குப் பதிவு செய்த னர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளை  விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், மே.25- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் மே.27 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது பொதுவான கோரிக்கைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

மே 29 இல் மதுரை மாநகராட்சி பணியாளர்களுக்கான இறுதிகட்ட ஊதியப் பேச்சுவார்த்தை

தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மதுரை, மே 25-  7 வது ஊதியக்குழுவால் பரிந்துரைக்கப்  பட்ட ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக பணியாளர்களை  பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா  ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை  மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரி யும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 30 ஆம் தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடத்தப் போவதாக மாநகராட்சி ஆணை யரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங் கப்பட்டது, இதனையடுத்து மதுரை தொழி லாளர் நலத்துறை மண்டல அலுவல கத்தில் செவ்வாயன்று தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்  பட்டது தொடர்ந்து இரண்டாவது  நாளாக மதுரை மாநகராட்சி மண்டலம் - 3 இல் புதனன்று  பேச்சு வார்த்தை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் சிஐடியு மதுரை மாநக ராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலா ளர் எம். பாலசுப்பிரமணியம் மற்றும் மாநக ராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற் சங்கம் பொதுச் செயலாளர்  எஸ்.  பூமிநாதன், தமிழ்நாடு சுகாதாரப் பணியா ளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலா ளர் எம். அம்சராஜ் ஆகியோர் செய்தியா ளர்களை சந்தித்தனர் . அப்போது அவர்கள் கூறுகையில், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு தினங்கள் மதுரை மாநகராட்சி மண்டலம் 3 மாநகராட்சி தொழிலாளர்களின் 21 அம்ச  கோரிக்கையினை முன் வைத்து தொழிலா ளர் நலத் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது .இதில் தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தொழி லாளர்களின் கோரிக்கையை முன் வைத்து  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிகாரி கள் கூறுகையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தொழிலாளர்கள் கோரிக் கைகள் குறித்து பேசுவதற்கு (கமிட்டி)  குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும்  29ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வோம். இல்லையெனில் மே 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறி வித்தது போல் வேலைநிறுத்த போராட்டம்  நடைபெறும் என்று கூறினர்.  பேச்சு வார்த்தையின் போது மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை தொழிற்சங்க நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

தேனி, மே 25-   அதிமுக வசம் இருந்த உத்தமபாளையம்  ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி  தேர்தலில்,உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 வார்டுகளில் அதிமுக -6, திமுக -3 மற்றும் அமமுக -1இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தை   அதிமுக கைப்பற்றி தலைவராக   ஜான்சி என்பவர் பதவி வகித்தார். பின்னர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி அதிமுக உட்பட திமுக உறுப்பி னர்கள் கடந்தாண்டு  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயன்ற னர். அதனை அறிந்து கொண்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜான்சி  தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்தார் . இதையடுத்து  அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு தலைவர் பதவி காலியாக அறி விக்கப்பட்டது. இந்நிலையில் ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு புதன்கிழமை யன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்  நடைபெற்றது. அதில் திமுகவைச் சேர்ந்த இன்பன்ட் பனிமய ஜெபரின்  என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். மொத்தமுள்ள 10 உறுப்பி னர்களில் ராஜினாமா செய்த ஜான்சி இந்த தேர்தலில் பங்கேற்க வில்லை. மீதமுள்ள 9 உறுப்பினர்களில், அதிமுகவைச் சேர்ந்த இருவர்  வெளிநடப்பு செய்தனர். எதிர்த்து யாரும் போட்டியிடாததால், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்  இன்பன்ட் பனிமய ஜெபரின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், கம்பம் எம்.எல்.ஏ. வுமான இராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்து தெரி வித்தனர்.

தெற்கு ஆணைக்குட்டம் தலித் மக்களைத் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை

நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர், மே 25- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே தெற்கு ஆணைக் குட்டம் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தலித் மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சாதிய சக்தியினருக்கு  மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே உள்ளது தெற்கு ஆணைக்குட்டம் கிராமம். இங்கு சாதி இந்துக்கள்   மற்றும் தலித் சமூ கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், பொது சுடுகாட்டில்  அருந்ததியர் பிணத்தை அடக்கம் செய்ய  உரிமை வழங்க வேண்டும்.  சாதி ஆதிக்க  சக்தியினரின் பிணங்களை எரிக்க மாட்டோம்,  செத்த மாடுகளைத் தூக்க மாட்டோம், அடிமை வேலைகளை செய்ய மாட்டோம் என  தலித் மக்கள் சூளுரைத்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு கடந்த 2008 மார்ச் 16 அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான தாக்கு தல் நடத்தினர். மேலும், அவர்களது வீடு களையும் அடித்து நொறுக்கினர். இதில்,  அய்யனார் என்பவரின்  கால்  உடைந்து போனது.  முத்துகிருஷ்ணனுக்கு தலை யில் அரிவாள் வெட்டும், முதுகு தண்டு வட எலும்பு முறிவும் ஏற்பட்டது.

அவர்  இறந்து விட்டதாக நினைத்து அங்கேயே  போட்டு விட்டு சென்றனர். மேலும் அழ கிரி, காளிமுத்து , குருசாமி போன்றோ ருக்கும் வெட்டுகாயங்களும், ரத்தக் கட்டு காயங்களும் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும்  மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை,  விருதுநகர், சாத்தூர், சிவகாசி  ஆகிய இடங்களில் உள்ள அரசு மருந்துவமனையிலும் சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர்.   அதேநேரத்தில் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதும், தாக்கியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தது. இந்தக் கொடுமையான தாக்கு தலை கண்டித்தும், குற்றவாளிகளை உட னடியாக கைது செய்யக் கோரியும் சிவ காசி பேருந்து நிலையம் முன்பு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தலித் அமைப்புகள் சார்பில் மறியல்  போராட்டம் நடைபெற்றது.  மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.   விடுதலை  இதையடுத்து,   பாதிக்கப்பட்ட அருந்  ததியர்  மக்கள் மீது போடப்பட்ட பொய்  வழக்கு   சாத்தூர் நீதிமன்றத்தில் 10  ஆண்டுகளாக நடந்து வந்தது, வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வழக்கறிஞர் கே.பாண்டீஸ்வரி, உயர்நீதிமன்ற  மதுரை கிளை வழக்கறி ஞர் பகவத்சிங் ஆகியோர் திறம்பட நடத்தி , வாதாடி பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட  பொய் வழக்கில் இருந்து  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்  விடுதலை பெற்றுத் தந்தனர். 15 ஆண்டு போராட்டம்  தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது போடப்பட்ட வழக்கு  கடந்த 15  ஆண்டுகளாக திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.  

வழக்கை நீர்த்துப் போகச் செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதி மன்ற மதுரை கிளையில்  வழக்கு   தொடந்து அரசு தரப்பு சிறப்பு வழக்கறி ஞராக பகவத்சிங் நியமிக்கப்பட்டு,  வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந் தது. தீர்ப்பு   இந்தநிலையில், வழக்கின் விசா ரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,  தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் குற்றவாளிகளே என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் முதல் குற்ற வாளி துரைராஜ், 2 ஆவது குற்றவாளி சிவக்குமார் ஆகியோர் இறந்து விட்ட னர். 3 ஆவது குற்றவாளியான  சந்திரன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதமும்.4 ஆவது குற்றவாளி யான முருகன் என்பவருக்கு அபரா தம், 5 ஆவது குற்றவாளியான முத்துராம லிங்கம் என்பவருக்கு 1 ஆண்டு சிறை  மற்றும் அபராதம், காளிராஜ், மாரிச் செல்வம் ஆகியோருக்கு அபராதமும், சின்னசர்க்கரை என்பவருக்கு 2 ஆண்டு  சிறை மற்றும் அபராதமும் விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பு கிடைத்ததும், பாதிக்கப்  பட்ட தலித் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தனர். மேலும், தங்களுக்காக போராடிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட தலித் அமைப்புகள் ஆகி யோருக்கு நன்றிகளைத் தெரிவித்த னர்.