திண்டுக்கல் மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகர் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் சிபிஎம் மாநகர் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகர்க்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணன். மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜோதிபாசு, கே.எஸ்.கணேசன், மாரியம்மாள் ஆகியோர் ஆணையர் மகேஸ்வரிக்கு புத்தகம் வழங்கினர்.