மதுரை திருநகரில் பேச்சியம்மன் பால்பண்ணை ரெஸ்டாரண்ட்டை மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் ஞாயிறன்று திறந்து வைத்தார். நிகழ்வில மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் பா.சேகர்-மலர்விழி ஆகியோர் வரவேற்றனர்.