districts

img

மயிலாடும்பாறையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

கடமலைக்குண்டு, ஜன.1- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிரா மத்தில் சனிக்கிழமை புத்தாண்டை முன் னிட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீ சார் இணைந்து நடத்திய கொரோனா விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மயி லாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிஅன்பில்சுந்தரம் தலைமை தாங்கி னார். மயிலாடும்பாறை காவல் சார்பு ஆய் வாளர் சதீஸ் முன்னிலை வகித்தார்.  இந்தக் கூட்டத்தை தொடர்ந்து மயிலா டும்பாறை கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்க ளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. மேலும் முக கவசம் அணி யாமல் சாலைகளில் நடமாடிய 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முக கவ சங்கள் வழங்கப்பட்டது. மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி மேல்நிலை பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.