விருதுநகர், மார்ச் 20- விருதுநகரில் காயம டைந்து 75 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா (65) திங்களன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த ஷேக்முஹமது என்பவருக்குச் சொந்தமான 65 வயதான லலிதா என்ற பெண் யானை கடந்த ஜன வரி 2ம் தேதி விருதுநகரில் ஒரு பெருமாள் கோயிலுக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு கொண்டுவரப் பட்டது. லாரியிலிருந்து கீழே இறக்கியபோது பக்கவாட் டில் சரிந்து விழுந்து யானை பலத்த காயமடைந்தது. திருவிழா முடிந்து மீண்டும் இராஜபாளையத் திற்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் விருதுநகர் ரயில்வே காலனி முத்து மாரி யம்மன் கோயில் வளாகத் தில் கட்டிவைக்கப்பட்டு லலிதா யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா திங்க ளன்று அதிகாலை திடீரென மயங்கி கீழே விழுந்து சற்று நேரத்தில் உயிரிழந்தது. தக வலறிந்த கால்நடை மருத்து வர்கள் மாயக்கண்ணன், சுபலேகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானை யை பரிசோதனை செய்து இறப்பை உறுதி செய்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சி யர் வீ.ப.ஜெயசீலனும் இறந்த யானையை நேரில் வந்து பார்வையிட்டு பாக னிடம் விசாரணை மேற கொண்டார்.