விருதுநகர், மார்ச் 10- விருதுநகர் நகராட்சி யில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தலைமையில் சீராக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் நகராட்சித் தலைவர் ஆர்.மாதவன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஸ்டான்லி பாபு, பொறியாளர் மணி, துணைத் தலைவர் தன லட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற னர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : பங்குனிப் பொங்கல் பண்டிகை வர உள்ளது. எனவே, வாரம் ஒருமுறை யாவது குடிநீர் வழங்கிட வேண்டும் என உறுப்பினர் முத்துராமன் கோரிக்கை விடுத்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கினால் பொது மக்களால் தாக்குப் பிடிக்க முடியாது. மேலும், குடிநீரில் புழுக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே நாட்களை குறைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என உறுப்பினர் இந்திரா தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு முதல் முறையாக குடிப்பதற்கு உகந்த தண்ணீர் கிடைத் தது. இதேபோல் தண்ணீர் வழங்குங்கள் என உறுப்பி னர் மதியழகன் தெரி வித்தார். தாமிபரணி குடிநீரை கூடுதலாக கேட்டுப்பெறுக ஆனைக்குட்டம் தடுப்ப ணையில் உள்ள தண்ணீர் மாசடைந்துவிட்டதாக குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளது. மேலும், கிணறு களில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக பார்டரில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் நாட்கள் ஆனாலும் குடிப்ப தற்கு உகந்த தண்ணீரை வழங்குங்கள். ஒரு பகுதிக்கு நல்ல நீரும், மற்றொரு பகுதிக்கு உப்பு சுவையுள்ள தண்ணீரும் வழங்கக் கூடாது. அனைத்து பகுதியி னரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். தாமி பரணி குடிநீரை கூடுதலாக கேட்டுப் பெற வேண்டும். இரண்டாவது தாமிரபரணி திட்டப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் எனவும் உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். குடிப்பதற்கு உகந்த தண்ணீரையே வழங்க வேண்டும். 13 ரூபாய் செலவு செய்து மினரல் வாட்டர் வாங்கும் நிலையில் பலர் இல்லை என உறுப்பினர் முத்துலட்சுமி தெரிவித்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் போது மேடான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை யென உறுப்பினர் சரவ ணன் தெரிவித்தார். அஹமது நகர் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி யிலிருந்து 12 முதல் 15 நாட்க ளுக்கு ஒருமுறையும், பிற நீர்த்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒருமுறையும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதை மாற்றி ஒரே கால இடைவெளி யில் குடிநீர் வழங்க வேண்டு மென உறுப்பினர் பசீர் அஹமது தெரிவித்தார். பின்பு, பதிலளித்த சட்ட மன்ற உறுப்பினர், ஆனைக் குட்டம் பகுதியில் 9 கிணறுக ளில் உள்ள தண்ணீரை குடிக்கலாம் என குடிநீர் வடிகால் வாரியம் ஆய்வு முடிவு கூறியுள்ளது. மேலும், ஒண்டிப்புலி குவாரி தண்ணீர், கோடை கால நீர்த் தேக்க குடிநீர், தாமிரபரணி குடிநீர் ஆகிய அனைத்தை யும் பாரபட்சமின்றி அனை த்து பகுதிகளுக்கும் கலந்து விட்டால் பிரச்சனை இருக் காது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் 5 முதல் 7 நாட்க ளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட முடியும். இதை ஆணையாளர் மற்றும் பொ றியாளர் நடைமுறைப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.