தேனி, ஏப்.9- தேவதானப்பட்டி அருகே விசாரணை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ராஜசேகரை திண்டுக்கல் மாவட் டத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு இட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தர விட்டுள்ளார் . பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி சூசையப்பர் கிராமத்தில் குடியிருந்து வரும் செல்வம் மகன் ரிசாத்ராஜ்.இவர் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. செல்போன், பணம் பறிப்பு தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை யினர், ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர் பாக ரிசாத்ராஜ் குடும்பத்தினர் மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனிடையே திண்டுக்கல் சரக காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா தேவ தானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரை திண்டுக்கல் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார்.