districts

img

இராஜபாளையம் ஒன்றியத்தில் வாறுகால்,பாலம் அமைக்கும் பணி துவக்கம்

இராஜபாளையம்,செப்.11- இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சியில் அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான புத்தூர் தளவாய்புரம் மெயின் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய 15 ஆவது நிதிக்குழு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேலவரகுணராமபுரம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணி, புத்தூர் ஊராட்சி வாழவந்தாள்புரத்தில்  ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர்கல் பதிக்கும் உள்ளிட்ட பணிகள் துவக்க விழா இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ்  தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்  ஜெயராம்  முன்னிலையிலும் நடைபெற்றது.  கவுன்சிலர் நவமணி,  ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.