வேடசந்தூர், ஜூலை 24- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் - கோவிலூர் சாலையில் உசிலம்பட்டியில் மூன்று இடங்களில் சாலையை தோண்டி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் இடத்தின் இரு பகுதியி லும் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது; மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என்ற இருளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை அமைக்கப்படாலும், இரு பகுதியில் முறை யாக வேகத்தடை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இரவில் இரு சக்கர வாக னங்களில் வருபவர்கள் சாலை தோண் டப்பட்டது தெரியாமல் கீழே விழுந்து காய மடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி யாக எச்சரிக்கை பலகை வைத்து பாலம் கட்டும் பணி நடைபெறுவதற்கு நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.