விருதுநகர், மார்ச் 18- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்,ஐ,சியில் உள்ள நிதியை அதானிக்காக முறைகேடாக பாஜக அரசு வழங்கி யதைக் கண்டித்தும். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசார ணையை ஏற்க மறுப்பதை கண்டித்தும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர், இப்போராட்டத்திற்கு நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினார், மேலும் இதில் மாவட்ட நிர்வாகி எம்.மீனாட்சி சுந்தம். நகர்மன்ற உறுப்பினர்கள் பால்பாண்டி, ரம்யா. சிவஞான புரம் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.