districts

img

தோல்பாவைக்கூத்து: தேசிய போட்டியில் மூன்றாவது பரிசை வென்ற இராஜபாளையம் மாணவிக்கு பாராட்டு

இராஜபாளையம், ஜன.19- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா தொன்மை பொம்மை விளையாட்டுக் கலையான தோல்பாவைக் கூத்து போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள் ளார்.  தமிழகத்தில் ‘கலா உத்சவ்’ என்ற தொன்மை பொம்மை விளையாட்டு கலை யான தோல்பாவைக்கூத்து குறித்த போட்டி கள் நடத்தப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் என் ஏ அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி சரண்யா பங்கேற்று, மாநில அளவில் முதலிடத்தை பெற்றார்.  தொடர்ச்சியாக என்சிஇஆர்டி மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டி யில் சரண்யா பங்கேற்றார். இதில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிக்கு ஒன்றிய அரசு சார்பில்  வெண்கல பதக்கமும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.  சாதனை படைத்த மாணவியை பள்ளி யின் தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, தலைமை ஆசிரியர் முனைவர் பி.ஏ.ரமேஷ் உள்பட ஆசிரியர்கள் பாராட்டி னர்.