மதுரை, ஏப்.4- ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி யதைக் கண்டித்தும் விலை உயர்வை திரும்பப்பெறக் கோரியும் 4 வழி சாலை களில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்ட ணத்தை உயர்த்தியதை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அதிகப்படி யான சுங்கச்சாவடிகளை குறைத்திட வேண்டும். வீட்டு வரி உயர்வை ரத்து செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 4 திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் தெற்கு வாசல் மார்க்கெட் அருகில் மத்திய - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் துவக்கவுரையாற்றினார். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகலா, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாக னத்தை டிரை சைக்கிளில் ஏற்றி, மாலை அணிவித்தும், கேஸ் சிலிண்டரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நர சிம்மன், இரா.லெனின், ம.பாலசுப்பிர மணியம், வை.ஸ்டாலின், ஜெ.லெனின், எஸ்.அழகர்சாமி, டி.செல்வா, மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை. ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை கிழக்கு தாலுகாக் குழு சார்பில் யா.ஒத்தக்கடை-யா.நரசிங்கம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆர்.வீரசேகர் தலை மை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி துவக்கி வைத்து பேசி னார். கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கார்த்திக் நிறைவு செய்து பேசி னார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பெரியார் சிலை முன்பி ருந்து ஊர்வலமாக புறப்பட்டு மணிக் கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகரச் செயலாளர் ஏ.அரபு முகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், கே.ஆர்.பாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கணே சன், எஸ்.ஜோதிபாசு ஆகியோர் பேசினர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கு ஊதியும், சிகண்டி அடித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சரத்குமார் சிறப்பு ரையாற்றினார். ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வேடசந்தூரில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செய லாளர் ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். அய்யலூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செய லாளர் மலைச்சாமி, பேரூராட்சி கவுன்சி லர் முகேஷ்வரி ஆகியோர் பேசினர். பாளையத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜரத்தினம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளை யத்தில் பிச்சை மணி, நெடுஞ்செழியன், முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். வத்தலக்குண்டுவில் மாவட் டக் குழு உறுப்பினர் சி.குணசேகரன், ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டையில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.செளந்தர்ராஜன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் ஆகி யோர் பேசினர். சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சூசை மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், வி.கே.முருகன் ஆகியோர் பேசினர். நத்தத்தில் தாலுகா செயலாளர் சின்னக் கருப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபா கரன், ராணி, மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின் ஆகியோர் பேசினர். ,
சாணார்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பி னர் பாப்பாத்தி தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தா மணி, மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனி குளத்து பைபாஸ் ரவுண்டானா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூருல் ஹுதா என்ற பகத்சிங், நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கன்னிவாடியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
கமுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு க.மாரிமுத்து தலைமை வகித்தார். இரா.முத்துவிஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாயல்குடியில் கடலாடி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்து சாமி, போஸ் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணகி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், இ.ராஜ்குமார், தாலுகா செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராமேஸ்வரத்தில் தாலுகா குழு உறுப்பினர் டி.இராமச்சந்திர பாபு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், தாலுகா செய லாளர் ஜி.சிவா, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் இ.ஜஸ்டின், ஏ.ஆரோக்கிய நிர் மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாடானையில் 4 ரோடு சந்திப்பு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிரெத்தி னம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு பேசி னார். முதுகுளத்தூரில் எஸ்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை பேசினார்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் உமாநாத், சண் முகப்பிரியா, விசுவநாதன் ஆகியோர் உரையாற்றினர். இளையான்குடியில் தாலுகா செய லாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராம லிங்கபூபதி, சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மானாமதுரை பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.