திண்டுக்கல், நவ.14- திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடு கிறது. திண்டுக்கல் மாநகராட்சி 35- ஆவது வார்டு பகுதியில் ஒத்தக் கண் பாலம் உள்ளது. வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், வேடப்பட்டி, வாழைக்காய்பட்டி, சாமியார் தோட்டம், குருநகர், நல் லாம்பட்டி, வேடபட்டி, அண்ணா நெசவாளர் காலனி, பாரதிபுரம் கிழக்கு, யாக்கப்பன்பட்டி, கள்ளுப் பட்டி, பல்வேறு கிராமங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பிரதான சாலையில் அமைந்துள்ளது ஒத் தக்கண் பாலம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலையும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்கிறது. ராவுத்தர் குளம், லெப்பை குளம், முத்துசாமி குளம் ஆகிய மூன்று முக்கிய குளங்கள் நிரம்பி இந்தப் பாலத்தின் அடியில் உள்ள வாய்க்காலில் செல்கிறது. தொடர் மழை காரணமாக வாய்க்காலுக்கு மேலே இடுப்பள வுக்கு தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இந்தப் பாலத்தில் ஏரா ளமான பள்ளங்கள் இருப்பதால் பலர் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர். தொடர் மழையால் இந்தப் பாலத்தில் கனரக வாகனங் கள் செல்ல அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. ஒத்தக் கண் பாலம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளோ, மாமன்ற நிர்வாகமோ கண்டு கொள்ள வில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை ஒழுங்குபடுத்தி அப்புறப் படுத்த வேண்டும். பாலத்தில் பழு தான பகுதிகளை சீர் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மீன்பிடிக்கும் போராட்டம் திங்களன்று கட்சி யின் நகர் செயலாளர் ஏ.அரபுமுக மது தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் பி. ஆஸாத், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.என்.ஜோதிபாசு, கே.எஸ்.கணேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாதர் சங்க மாநில துணைச்செய லாளர் ஜி.ராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.