வெம்பக்கோட்டை, செப்.5- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் வெள்ளை மற்றும் நீல நிறத்திலான சங்கு வளையல்கள் மற்றும் வளையல் தயாரிக்கப் பயன்படும் சுடுமண் அச்சு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்குக் கரையோரத்தில் கடந் தாண்டு முதல் அகழ்வா ராய்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது. இரண் டாம் கட்ட அகழாய்வு ஏப் ரல் 6-ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. இரண்டாம் கட்ட அகழ் வாராய்ச்சியில் தங்க அணி கலன், தங்கத் தாலி, ஆண் உருவச் சுடுமண் பொம்மை, யானைத் தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடு மண் வணிக முத்திரை, சுடு மண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு உள்ளிட்ட எண்ணற்ற தொன்மையான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்தநிலையில் செவ்வா யன்று வெள்ளை மற்றும் நீல நிறத்தினால் ஆன சங்கு வளையல்கள்- சங்கு வளை யல்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுடுமண் அச்சு ஆகியவை கண்டெ டுக்கப்பட்டுள்ளது. இங்குத் தொன்மையான மனிதர்கள், சங்கு வளையல் தயாரிப்ப தற்கான கூடம் இருந்ததற் கான சான்றாக இவ்விடம் திகழ்வதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ள னர்.