districts

img

தோழர் டி.மணி நினைவு தினம் தலைவர்கள் - பொதுமக்கள் அஞ்சலி

நாகர்கோவில், மே 1- விடுதலைப் போராட்ட வீரர், தாய் தமிழகத்துடன் குமரி மாவட்ட இணைப்புக்காக போரா டியவர், குமரி மாவட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர், சட்ட மன்ற உறுப்பினராக 4 முறை  தேர்வு செய்யப்பட்ட மக்களின் அன்புக்குரிய தலைவர் தோழர் டி.மணியின் 10 ஆவது நினைவு தினம் மே முதல்நாள் ஞாயிறன்று குமரி மாவட்டம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.  குழித்துறை தாமிரபரணி அருகில் உள்ள அவரது நினை விடத்தில் சிபிஎம் மாநில செயற்  குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது, மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.அனந்தசேகர், என்.உஷாபாசி, மூத்த தலைவர்கள் என்.முருகேசன், கே.மாதவன், வட்டர செயலாளர்கள் மோகன் குமார், ஜெயராஜ் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், புகழ்பெற்ற ஓவி யர் ராஜசேகர் உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர். பார்வதிபுரம் மாவட்டக்குழு அலுவலகம் மற்றும் வட்டா ரக்குழு அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தோழர் டி. மணியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து நினை வஞ்சலி நடைபெற்றது. இராஜாக்  கமங்கலம் வட்டாரம் பறக்கை பகுதியில் சிபிஎம் கிளை செயலா ளர் சுப்பிரமணியன் தலைமை யில் அஞ்சலி செலுத்தப்பட்டது.