விருதுநகர், மே 7- சிஐடியு சங்கத்தின் மூத்த தலைவரும் தமிழகத்தொழிலாளர்களின் அன்புக்குரிய தலைவருமான தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட சிஐடியு சார்பில் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது, இராஜபாளையத்தில் நடைபெற்ற முகாமிற்கு எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. என். தேவா இரத்தம் வழங்கி துவக்கி வைத் தார். மாவட்ட தலைவர் எம். மகாலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். அரசு மருத்துவ மனை மருத்துவர் மாரியப்பன், ரத்த வங்கி நிர்வாகி கிரிஜா ஆகியோர் விளக்கிப் பேசினர். இந்நிகழ்ச்சியில் 106 ஆவது முறையாக இரத்த தானம் செய்த லயன்ஸ் கிளப் செயலாளர் ரவிக்குமார ராஜாவை அனைவரும் பாராட்டினர். முடி வில் சிபிஎம் நகர செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார். மேலும் இதில்,சிஐடியு நிர்வாகிகள் பி. ராமர், வி.சந்தானம், ஆர் எம் மாரியப்பன், ஆர் சோமசுந்தரம், எம். திருமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ரத்ததான கழக நிர்வாகிகள் ஜெகன், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.