திண்டுக்கல், ஜன.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் முதுபெரும் தலைவர் தோழர் எஸ்.ஏ.தங்கராஜனின் 19 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி திண்டுக் கல்லில் நடைபெற்றது. வத்தலகுண்டு சாலையில் கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச்செயலாளர் வ.கல்யாண சுந்தரம், தோழர் எஸ்.ஏ.தங்கராஜனின் இளைய மகனும் காப்பீட்டுக்கழக ஊழி யர் சங்கத்தின் கோட்டத் தலைவர் களுள் ஒருவருமான வாஞ்சிநாதன், மற்றும் தோழர் எஸ்.ஏ.தங்கராஜனின் மனைவி சகுந்தலாம்மா, மூத்த மகன் ரவிச்சந்திரன், மகள் வனிதா, பேரன், பேத்திகள், மருமகள்கள், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிபிஎம் நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, சிஐடியு தோல் பதனிடும் தொழிலாளர் சங்க செயலாளர் சி.பி.ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், நிர்வாகி கள் ஜெய்லானி, ஜோசி, ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். சிஐடியு அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்கம் வி.பி.சிந்தன் நினைவ கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செந்தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என். பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.