districts

img

மாதர் சங்க மூத்த தலைவர் தோழர் எஸ்.ஞானம் காலமானார்

மதுரை, ஜன. 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்ட  முன்னாள்  செயற்குழு உறுப்பினரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான தோழர் எஸ்.ஞானம் அவர்கள் (64) அண்ணாநகர் செண்பகத்தோட்டம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் ஜனவரி 11 செவ்வாய்க்கிழமையன்று கால மானார்.  அன்னாரது மறைவுச் செய்தி யறிந்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்தி ரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி. ராமகிருஷ்ணன்,  இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், இரா. லெனின், அ. கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர் பி. ராதா, வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு,  ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். சசிகலா, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மா. செல்லம், ப்ரிதி, பா. பழனியம்மாள், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் என். ஜெயச்சந்திரன், மாவட்டச் செய லாளர் அ. பால்முருகன், இணைச் செயலாளர்கள்  நாராயணன், சு. கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி.செல்வா மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  தோழர் எஸ். ஞானம் அவர்கள் உடல்  சொந்த ஊரான இராமநாத புரம் மாவட்டம்  முதுகுளத்தூர் அருகிலுள்ள பேரையூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி நிகழ்ச்சி சொந்த ஊரில் ஜனவரி 12 அன்று நண்பகல் 3 மணிக்கு நடை பெற்றது.  இவரது கணவர் வி. சங்கர லிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். உ.வாசுகி இரங்கல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினரும் ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவருமான உ.வாசுகி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  தோழர் எஸ்.ஞானம் அவர்கள் மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவராகவும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்து திறம்பட செயல்பட்டவர். உண்மையில் ஓய்வறியா உழைப் பாளி, எளிமைக்கு இலக்கணம், தொலைபேசி எண்கள் அத்தனையை யும் மனப்பாடமாக சொல்லும் அபார நினைவாற்றல், மதுரையில் உள்ள இதர தன்னார்வ அமைப்பு களை மாதர் சங்கத்துடன் ஒருங்கி ணைத்தது, வெள்ளந்தி சிரிப்பு என நிறைய சொல்லலாம். இது இழப்புகளின் காலமாக இருக்கி றது... மிகுந்த சோகம் என்று தெரி வித்துள்ளார்.