districts

img

தோழர் பரமசிவம் நினைவு தினம்

திருவாரூர், மே 3-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேர ளம் கட்சி அலுவலகத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வர்களில் ஒருவரான தோழர் எஸ்.பரமசிவத்தின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தோழர் எஸ்.பரம சிவம் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெ. முகமது உதுமான் மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர் கள் உட்பட பலர் பங்கேற்றனர்.