மதுரை, டிச.28- மதுரை மாவட்டம் கைலாச புரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தோழர் முருகேசன் (வயது 62) அவர்கள் டிசம்பர் 28 புதனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் வடக்கு - 1ஆம் பகுதிக்குழு கைலாசபுரம் கிளைச் செயலாளராக செயல்பட்டவர். கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இரவுக்காவ லராகவும் பணியாற்றியவர். அவரது மறைவுக்கு கட்சியின் மதுரை மாநகர் மாவட் டக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கைலாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.