districts

img

தோழர் ஜோதிராம் நினைவுதினம்

மதுரை, டிச. 30-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்  முன்னாள் மாவட்ட செய லாளர் மறைந்த இரா.ஜோதிராம் அவர் களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா.நரசிம்மன், எஸ்.அழகர்சாமி, டி.செல்வா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சந்தியாகு, ஏ.பி.சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மத்திய ஒன்றாம் பகுதிக் குழு சார்பில் கார்க்கி படிப்பகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பகுதிக் குழு செய லாளர் வை.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தோழர் இரா.ஜோதி ராம் அவர்கள் படத்திற்கு மாலை அணி வித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி னர்.