மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் நகர் முன்னாள் செயலாளர் மறைந்த தோழர் ஐ.ஆர். கணேசனின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் திருவில்லிபுத்தூரில் கடைப்பிடிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி, நகர் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் மரிய டேவிட், சிஐடியு நிர்வாகிகள் வீர சதானந்தம், சந்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.